Skip to main content

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன்
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே
அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர்
click and view:  XVUs4DXqqP
Marina🏄
இந்தியாவில் சுதந்தரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும். நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத்தன்மையும்தான் பெருகும். - குடிஅரசு, 3.11.1929
Jஉன்னுள் அன்றாடம் விழித்தி ருந்துஉன்...
உறக்கம்நான் அழித்திட்​டேன்!

கண்ணுள் ஊடுறுவ இரவு தோரும்காண்...
கனவும் க​லைத்திட்டேன்!

கன்னிஎன் காதல்நோக்கு உனக்குகடும்​...
இன்னல்ஆக; விலகிட்டாய்!             

வந்துமுன்நில்! என்இதழ்கள் இனிக்கும்;
எனும்படி சாதி ஒழிப்புக்கு...

என்னோடுஎன் ஆதிதமிழ் சொந்தமேநீ...
முயங்க இல்லையே!

பிடிப்பட பேதமத  கொக்கி புழுநீ அல்ல;
மடிந்துறுமோ தலித்வீரமே! 
எவனோ சாதிநோயின் அடிமைகுளம்...
அவனின் மீனா நானும்?

கவலையை ஒடுக்கி ஆசைகளை...
புவனமே புறக்கணித்தேன்;
கவனமாய்  உன்நினைவு அதிர்வை;
தவமே...  உணர்ந்தேன்!

கடமை காதல் சுவாசமே கனன்றேன்!
தடுமாறாது நீ வாழ்க!
நடைமுறை சாதிகள்  நொறுக்கிட...
படைதளபதி ஆகினேன்!
தடையிராது;  அன்பே பேதம் அறுப்பு;
உன்சபதம் முடித்திட [எனக்கு]
விடைதா! எதிரிகள்முன் தைரியம்தா!


Public

2d

ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன?
கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை!
Prom Night: பள்ளி பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும்.
இந்த நாளுக்கு மாணவ, மாணவிகள் ஜோடியாக வர வேண்டும். தன் மகளை prom nightக்கு அழைக்க ஒரு மாணவன் வருகிறான் எனில், பெற்றோர் வரவேற்பார்கள். ஒருவேளை யாரும் வரவில்லை எனில், கவலைப்படுவார்கள். தன் மகள் எதிர்பாலினத்தில் ஒருவனை கூட ஈர்க்கும் அளவுக்கு வளரவில்லையோ என. இதேதான் மாணவனுக்கும்.
அந்த விழா வெறுமனே ஜோடி நடனமும் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த ஜோடி முதலியவற்றுக்கான விருதளிப்பும் கொண்ட விழா மட்டுமே. ஆனாலும் அடிப்படையில் சமூகரீதியாக இணைதேடலை அங்கீகரிக்கும் நிகழ்வு அது.
விழாவின்போது வரும் ஜோடி முன்னமே காதலர்களாக இருக்கலாம். அல்லது பின்னர் காதலர்கள் ஆகலாம். அல்லது நண்பர்களாக தொடரலாம் அல்லது பிரிந்து அவரவர் வாழ்க்கைக்கு செல்லலாம். எதற்கும் எவ்வித கட்டாயமும் இல்லை.
Dating: இதற்கு பருவம், நேரம் எல்லாம் இல்லை. எப்போதும் நேரம்தான். தன்னை ஒருவர் ஈர்த்து, அவர் தனக்கான துணையாக இருக்கும் தகுதியும் புரிதலும் கொண்டவர்கள் என நினைப்பவர்களுக்கான வாய்ப்பு. தான் விரும்பும் வகையில் விரும்பப்படும் நபர் இருக்கிறாரா என பரிசோதிக்கும் காலம்தான் டேட்டிங் காலம்.
Do you have a date? Shall we go for a date?
இது ஒருநாளாக இருக்கலாம். ஒருவாரமாக இருக்கலாம். அல்லது ஒரு மாதமாக கூட இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம். Comfort லெவல் வரும்வரை தொடரும். அல்லது உடையும்வரை தொடரும்.
தோகை விரித்து மயில் ஆடும் காலம் இது. உங்கள் அழகு, நற்பண்புகள் மட்டும் காண்பித்து இணையை கவர முற்படுவீர்கள்.
Love: Datingம் சரியாகி தனக்கான துணையே என்ற நம்பிக்கை வருகையில்தான் இந்த அடுத்தக்கட்டம். இதை love என்று கூட சொல்ல மாட்டார்கள். Relationship என்பார்கள். இன்னும் நெருக்கமாவார்கள். நெருக்கம் என்றதும் கலவி என ஆர்வமாக படிக்க வேண்டாம். கலவி எல்லாம் prom night காலத்துக்கும் முன்னமே அரங்கேறியிருக்கும். இவ்வளவு காலம் காத்திருக்க அது ஒன்றும் இந்தியா அல்ல. நான் சொல்வது மனநெருக்கம்!
இந்த ரிலேஷன்ஷிப் காலகட்டத்தில் பெரும்பாலான ஜோடி ஒரே வீட்டில் தங்க தொடங்குவார்கள். இணை தேடல் பரிசோதனையின் அடுத்த கட்டம். ஒரே கூரையின் கீழ் வாழ்கையில் இன்னுமே நம் முகமூடிகள் கழன்றுவிடும். வேலைகள், பொறுப்பு, பொறுப்பின்மை, அடுத்தவருக்கு உறுதுணையாக இருத்தல் என பல விஷயங்களை பார்க்க முடியும்.
இந்த கட்டத்திலும் மனம் ஒப்பவில்லை எனில், மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு, 'Get the hell outta my life' என விலகி வந்துவிட முடியும்.
Marriage: ரிலேஷன்ஷிப்பிலும் தேறி, பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, புரிதல் என ஏற்பட்டபிறகுதான் அந்த முக்கியமான நாள். ஆண் மண்டியிட்டு அமர்ந்து மோதிரத்தை பெண்ணுக்கு கொடுத்து, 'Will you marry me?' என்னும் நாள்.
அப்போது அந்த பெண், 'Oh my god!' என உலக அழகி பட்டம் கிடைத்தது போல் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி அனைவரும் பார்க்கின்றனரா என பார்ப்பாள். ஏனெனில் அவளுக்கு அதுதான் பெருமைமிகு தருணம். "See here everybody.. Finally there is this guy, on his knees, who wants to spend his rest of life with me" என கர்வமும் நிம்மதியும் கொள்ளும் தருணம்.
ஆக, திருமணம் என்ற கட்டம் வருவதற்கே அங்கெல்லாம் அவ்வளவு காலம் பிடிக்கிறது. அவ்வளவு கஷ்டம் இருக்கிறது. இந்தியாவில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு எளிதான விஷயம் திருமணம் செய்து கொள்வது. அதிலும் மேலைநாடுகளில், marriage proposal கட்டத்தையும் தாண்டி, பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு ஆணும் ஆணின் பெற்றோர் வீட்டுக்கு பெண்ணும் சென்று முறைப்படி அறிவிக்க வேண்டும். அவர்களும் ஒப்புக்கொண்ட பின்னே கல்யாணம். அந்த கல்யாணமும் தேறவில்லை எனில், இருக்கவே இருக்கிறது விவாகரத்து.
இனி, நம்மூரில் என்ன நடக்கிறதென பார்ப்போம்.
ஒரு பெண் தன் ஆண் நண்பனை வீட்டுக்கு கூப்பிட்டு வரவே மாமாங்கம் காத்திருக்க வேண்டும். அதிலும் நிறைய பேச்சுகள் வரும். ஆண் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டி வர வேண்டுமென்றால் சொல்லவே வேண்டாம். சுவர்கள் கூட ரகசியம் பேசும்.
ஆணுக்கு பெண்ணை பற்றிய அறிவும் பெண்ணுக்கு ஆணை பற்றிய அறிவும் தெரியாமலேயே பள்ளிக்காலத்தை முடிக்கிறார்கள். அவர்கள் எதிர்பாலினத்தை பற்றி அறிந்த எல்லா தகவலும் சினிமா, பத்திரிகை மற்றும் கேட்ட செய்திகள் மட்டும்தான். அதில் எள்ளளவும் உண்மை இருக்க போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பிறகு, தத்தக்காபித்தக்கா என தட்டு தடுமாறி சைட், 'கண்கள் இரண்டால்', லெட்டர் என ஓடி, காதல் என சொல்லிக்கொள்ளும் நிலையை ஓர் ஆணும் பெண்ணும் அடைந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இங்கு அவர்கள் இழந்திருப்பது இரண்டை. Prom and dating. இந்த இரண்டு விஷயங்களையும் காதலில்தான் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது.
ஆணை பெண் அறியவும் பெண்ணை ஆண் அறியவும், பின் கலவிக்கான முத்தாய்ப்புகளும் அதற்கும் பின், இவன் அல்லது இவள் தனக்கு சரியான துணையா என்பதையெல்லாம் இதற்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும். ஹும், எத்தனை சிரமம்?
இதற்கு பிறகு 'வேலைக்கு ஆகாது' என datingல் இருந்து விலகுவதை போல் விலகினால் இங்கு அது காதல் முறிவு என அழைக்கப்படும். 'அவ அவன்கூட நல்லா பழகிட்டு காசெல்லாம் செலவழிக்க வச்சுட்டு, கடைசில கழட்டி விட்டுட்டா.. வீட்ல சொல்றவன கட்டிக்கிட்டா', 'அவன்தான் மச்சி கெத்து.. முடிஞ்ச வரைக்கும் அந்த பொண்ணு கூட சுத்துனான்.. நல்லா எஞ்சாய் பண்ணான்.. அப்புறம் எஸ்கேப் ஆகிட்டான்!' என்ற பேச்சுகளை நாம் கேட்பதெல்லாம் இப்படித்தான். ஏனென்றால் இங்கு நமக்கு பிரச்சினை ஒன்றே ஒன்றுதான். கற்பு!. 'அவன் எஞ்சாய் செஞ்சதும்', 'அவள் பழகியது' மட்டும்தான் நமக்கு பிரச்சினையே தவிர அதை தாண்டிய உணர்வு, உயிரியல் தேவை, தனிமை எல்லாம் அல்ல.
இந்த லட்சணத்தில் எங்கே ரிலேஷன்ஷிப், 'ஒன்றாய் தங்குவது' எல்லாம்? நேரடியாக திருமணம்தான். அந்த திருமணத்தில்தான் மேற்சொன்ன ரிலேஷன்ஷிப் மற்றும் 'ஒன்றாய் தங்கல்' எல்லாம் வெளிப்படும். ஆனால் இச்சமயத்தில் ஆணும் சரி, பெண்ணும் சரி, உறவில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு இருவருக்கும் சமூகம் ஆப்படித்து செருகியிருக்கும் திருமணம் என்ற பெயரில்!
ரிலேஷன்ஷிப் அல்லது 'ஒன்றாக தங்கல்' என்பதையும் தங்கள் கேடுகளுக்கு ஒரு கூட்டம் பயன்படுத்தி கொள்வதெல்லாம் சுத்த அரைவேக்காட்டுத்தனம்.
தனக்கான துணை அல்ல என்ற புரிதலுக்கு பின் வாழும் ஜீவனற்ற மிச்ச வாழ்க்கைதான் திருமண வாழ்க்கை என்பது. இதனால்தான் marital rape, suicide, murder எல்லாம் அநாமத்தாக நிகழ்கின்றன.
ஒரு பெண் தனக்கு முத்தமிட வரும் காதலனை தள்ளிவிடுவதில்தான் தன் குடும்ப கவுரவம் இருப்பதாக நினைக்கிறாள். விருப்பமில்லையென விலகினாலும் தான் விரும்பிய பெண்ணை மணப்பதுதான் காதலின் நேர்மை என ஆண் நினைக்கிறான். For freaking hell sakes, this is love man! இங்கே எங்கு உன் குடும்பம் வந்தது, உன் நேர்மை வந்தது? All is good in love and war!
ஆணை புரியாத பெண்ணையும் பெண்ணை புரியாத ஆணையும் ஆண், பெண் உறவு புரியாத சமூகத்தையும் வைத்துக்கொண்டு உண்மையிலேயே நம் நாட்டில் rape செய்யப்பட்டுவது மனித உணர்வுகள்தான்.
ஓர் இயல்பான இணை தேடலுக்கு கூட வழி இல்லாமல், எல்லாவற்றையும் அடைத்து வைத்து சிந்திப்பதற்கு பெயர் பண்பாடு இல்லை.

விவாகரத்துகள் அதிகம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இன்னுமே அதிகம் ஆகும். காரணம் நாங்கள் அல்ல. காதலர்களும் அல்ல. நீங்கள்தான். உங்கள் கட்டுப்பெட்டி கட்டுப்பாடுகள்தான்.

மேலை நாட்டின் மூலதனத்துக்கு வேலை பார்க்கும்படி இளைஞர்களை பணித்துவிட்டு, அவர்களின் கலாசாரத்தை மட்டும் ஏற்காதே என சொன்னால் எப்படி? பணம் கொண்டுவரும் எதையும் ஏற்கும் சமூகத்தைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
புத்திசாலித்தனம் என்பது, இங்கு இருக்கும் இந்த பாணி உறவுநிலைகளையும் இணை தேடல்களையும் ஆண், பெண் உறவுகளையும் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றார்போல் இலகுவாக்குவதுதான். இல்லையெனில் முறிவுகள் அதிகமாக இருக்கும்; மனதிலும் மணத்திலும்! தனிமை தேடும் நபர்களும் அதிகமாவார்கள். அவர்கள் தனிமையில் என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களால் ஊகிக்கவே முடியாது.
Rajasangeethan John
KRS | கரச
குஜராத் தலித் சக்தியின் முகம்! Who is Jignesh Mewani? மாட்டுத் தோல் என்று எண்ணிக் கொன்ற காவிகளின், ஒரே 'பயம்'! 18,000 வாக்குகள் அதிகம் பெற்று, காவிகளைக் கவ்வச் செய்த, தன்னிச்சை/ தன்விழை வேட்பாளர்!
KRS | கரசDec 18
Replying to @kryes
குஜராத், தலித் உரிமைச் செயற்பாட்டுத் தலைவருக்கு வெற்றி! வாழ்த்துக்கள், இளைஞர் ஜிக்னேஷ்! நாட்டின் 'பிரதமரே' அழுதும், உங்கள் வெற்றியைத் தடுக்க முடியலை! அதுவும் கட்சி சாராத, தன்னிச்சை வேட்பாளர்! செம!! 
   
KRS | கரசDec 18
நாட்டின் நெடும் பாதைக்கு... வெற்றியோ/ தோல்வியோ முக்கியம் அல்ல! வெற்றி மட்டுமே முக்கியம்:))) இது BJP வெற்றி அல்ல! Congress தோல்வி! கடையைச் சாத்தும் நேரம்; இருந்த ஒரு மாநிலத்தையும் தாரை வார்த்து.. 17 + 1 = 18, BJP குருக்ஷேத்திரம் ஆக்கிய Congress கட்சிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்😂 
   
KRS | கரசDec 18
Replying to @kryes
கொடுமைகளுக்குப் பின்பே விடிவு! இருளுக்குப் பின்பே பகல்! பிற்போக்குவாதக் காவியின் "மாற்றம்"= இனி, காங்கிரசின் கையில் இல்லை! அது யார் கையில் உள்ளது? = அந்தந்த மாநில மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியது தான்! தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்! வாழி பெரியார்-இயல்!
   
KRS | கரசDec 18
Replying to @kryes
Technology டா!:))))  /Gujarat chief electoral officer BB Swain said EVMs cannot be hacked and no doubt should be created around this/ Can EVMs never be hacked? Such a great technology? Even world bank servers get hacked:) Indian EVMs are really great!!
   
மௌவுரியன்
இதுல எதோ சூச்சமம் தெரியுதே??ஓட்டு மெசின்ல எதோ செஞ்சி இருக்கானுங்க!! 
Dqcnu3cvoaaongx
சுரேஷ்.அDec 7
இந்த திருவோளச்சீட்டு முறையிலோ இல்லனா குடவோலை முறையிலோ இனிமேல் எலக்‌ஷன் நடத்த முடியாத ஆபீசர்😎😎LIGyRA0b7e
Dq2iey4vaae73g1
சுரேஷ்.அDec 12
குறும்படம்!!! 
ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !

ஒக்கிப் புயல் தாக்கி 19 நாட்கள் முடிந்த நிலையில், இப்போது தான் பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிப் பார்க்க ‘மனம்’ வந்திருக்கிறது. இன்று (19.12.2017) கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மோடி வருகிறார்.

மோடியின் வருகை குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த பொன்னார், “மீனவ கிராமங்களுக்கு பிரதமர் நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என்று மீனவர்கள் விரும்புகின்றனர். பிரதமருக்கும் நேரடியாக மீனவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் மீனவ கிராமங்களில் பிரதமர் வரும் ராணுவ ஹெலிகாப்டர் இறங்கும் அளவிற்கு எந்த கிராமமும் இல்லை என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு மோடி, நேரடியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் மற்றும் விவசாயிகளை அவர் கன்னியாகுமரியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரதமர், 150 மீனவ பிரதிநிதிகள் மற்றும் 150 விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிவார்” என்றும் கூறியிருக்கிறார்.

(மேலும்)
http://www.vinavu.com/2017/12/19/modi-visit-kanyakumari-ochki-affected-place/
Shared publiclyView activity

Comments

Popular posts from this blog

DNAs News honey bees' garden!

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது... பெண்​ சிசு   எனும்நேர்வில்; கொல்லஎண்ணும் குணக்கேடனே!  பெண்மேல் பாசம்; உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர்  முள்விஷமே! உள்ளம் கவர்ந்து காதலித்தவளை  காப்பான்தலித்! கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்... உயிரை யும்மாய்த்து! Marina🏄 @ Mark2kali கண்ணகி 2.0 👏👏  #சாவுங்கடா   pic.twitter.com/pS8NAwJVqo 8:38 PM - 12 Dec 2017 Twitter By:   Marina🏄   @Mark2kali Read: Labels:  சாதிக்குள் கல்யாணம்​ தவ​றென்று! ​ சட்டம் ஆக்கிடு! #SaveTnFishermans❤ @ Rahuman_love #sankarmurder  நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..!  pic.tw...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!

Marina🏄   @ Mark2kali De c 5 இந்தி இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம்  #Dec6 pic.twitter.com/LLnRl2TjVy Marina🏄   @ Mark2kali 24h Replying to  @mrtherkathi   @RajeshPrem1 அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள்.  pic.twitter.com/ HMSHb03R0u KRS | கரச   @ kryes 1h Replying to  @kryes இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்...